“என்னுடைய ஆக்ஷன் படம் இன்னும் எடுக்கல”

சென்னையில் உள்ள கூகை நூலகத்தில், திரைமொழி கலந்துரையாடல் சம்பந்தமான நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக் கொண்டு, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், நான் நினைத்த ஆக்ஷன் படங்களை இன்னும் எடுக்கவே இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், கில் பில் மாதிரியான ஆக்ஷன் படங்களை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை என்றும், அதுமாதிரியான படங்களை இங்கே எடுக்கவே முடியாது என்றும் அவர் கூறினார்.

பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஆக்ஷன் படங்களை மட்டும் தான், நாம் இங்கு எடுக்க முடியும் என்றும், லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News