சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்!

சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் இன்று (அக்.18) வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு நிலையாக வலுவிழந்து (அக்.17) நேற்று அதிகாலை புதுச்சேரி – ஆந்திரா மாநிலம் நெல்லூர் இடையே கரையை கடந்தது. இதையடுத்து அதன் மேகக் கூட்டங்கள் தெற்கு ஆந்திராவில் நிலை கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்.18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று (அக்.17) லேசான மழை பெய்து வந்த நிலையில்,(அக்.18) இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்.18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News