கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது; 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலினைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் கம்பம்மெட்டு சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கிரிக்கெட் மைதானம் அருகே தனியார் இடத்தில் சாக்குபையுடன் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 4 பேரை போலீசார் விசாரணை செய்து அவர்கள் வைத்திருந்த சாக்குபையை சோதனை மேற்கொண்டபோது அதில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில். அவர்கள் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சுஜித்குமார் (வயது 26), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்பாண்டி (22), கிஷோர்நாத் (27), மற்றும் எழுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோர் என்பதும் இவர்கள் ஆந்திர மாநிலம் சிலுக்குவார்பேட்டை சுபானி என்பவரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்தததாகவும், அதன் பின்னர்  நான்கு பேரும் சேர்ந்து கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜித்குமார், ரஞ்சித்பாண்டி, கிஷோர்காந்த், சுரேஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுபானி என்பவரை பிடிக்க போலீசார் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News