சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களில் பூர்விகா மொபைல்ஸ் என்ற பெயரில் செல்போன் விற்பனையகம் செல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளை தொடங்கி நடத்தி வரும் இந்நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல், வரியைப்பு செய்ததாக எழுந்த புகாரை எடுத்து நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் நேற்று (அக்.17) வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு, பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் நேற்று இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக (அக்.18) இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.