சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வடமாநிலத்தில் இப்படத்திற்கான புரமோஷன் நேற்று நடைபெற்றது. அப்போது, படம் குறித்தும், தன்னுடைய சொந்த அனுபவங்கள் குறித்தும், அவர் பேசியிருந்தார்.
அந்த சமயத்தில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சூர்யா, “நான் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றி இருந்தேன். அப்போது, பயிற்சி பணியாளராக இருந்ததால், எனக்கு முதல்முறையாக 750 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, 1,200 ரூபாயாக சம்பளம் மாறியது. அதன்பிறகு, 2 வருடங்களுக்கு பிறகு, 8 ஆயிரம் ரூபாயாக மாறியது” என்று தெரிவித்தார்.
மேலும், என் தாய் வாங்கிய 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்காக தான் நடிகராக மாறினேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யா கூறியுள்ள இந்த தகவல், ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.