ஊசி போட்ட வாலிபர் மரணம்: போலீ டாக்டர் கைது செய்து விசாரணை!

ஊசி போட்டதால் வாலிபர் இறந்ததாக புகாரின் பெயரில் போலி டாக்டரை செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தை சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவு காரணமாக சிதம்பரம் நகரில் உள்ள மந்தகரை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்த வந்த சரவணன் என்கிற தளபதி ராஜா (50) என்பவரிடம் காண்பித்துள்ளார். அப்போது கவிமணிக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற கவிமணி திடீரென வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவருடன் வந்தவர்கள் கவிமணியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிமணி ஏற்கெனவே விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கவிமணியின் தாயார் கவிதா இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீ டாக்டரான சரவணன் என்ற தளபதி ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News