‘டானா’ புயல்: 190 ரயில்கள் ரத்து!

‘டானா’ புயல் காரணமாக 190 ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

‘டானா’ புயல் ஒடிசா-மேற்கு வங்கம் இடையே நாளை (அக்.25) அதிகாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘டானா’ புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை 190 ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இதேபோன்று புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் இன்று மாலை முதல் நாளை காலை வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

Recent News