உணவு அருந்தாமல் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!

போதை பழக்கத்திற்கு அடிமையாகி உணவு அருந்தாமல் வெறும் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 1 வது தெருவை சேர்ந்தவர் முகமதுஷபி (23). பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த ஷபி கூலி வேலை பார்த்து வந்தார் .

இந்நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையான ஷபி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனி அறையில் தினமும் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி எப்போதும் போதையிலேயே இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் உணவு அருந்தாமல் தொடர்ந்து போதை ஊசி, மாத்திரை எடுத்து வந்த ஷபி நேற்று மாலை வீட்டில் நீண்ட நேரம் தூங்கி கொண்டிருந்தை பார்த்து அவரது அண்ணன் முகமது ரஃபி (25) அவரை எழுப்ப முயன்றுள்ளார்.

அப்போது ஷபி சுயநினைவு இல்லாமல் இருப்பது தெரிய வந்ததை அடுத்து ரஃபி உடனே தனது தம்பியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஷபியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் ரஃபி அளித்த தகவலின் பேரில் புளியந்தோப்பு போலீஸார் ஷபி உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஷபி போதை ஊசி செல்லுத்திக்கொண்டு உணவு அருந்தாமல் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News