முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.23) சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக 6 இடங்களில் இன்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News