ஜெயிலர் 2 கன்ஃபார்மா? – நெல்சன் கொடுத்த அப்டேட்!

இயக்குநர் நெல்சன் தயாரித்துள்ள ப்ளெடி பெக்கர் என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை புரமோஷன் செய்யும் வகையில், நெல்சனும், கவினும் பல்வேறு சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

அவ்வாறு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அடுத்த படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த நெல்சன், “அடுத்து படம் இயக்குவதாக இருந்தால், கூலி முடித்த பிறகு தான் பண்ண வேண்டும். இதற்கு இடையே வேறு எந்த படமும் இல்லை” என்று கூறினார்.

ரஜினியுடன் அடுத்த படத்தை இயக்க உள்ளேன் என்பதை, பட்டும் படாமல், நெல்சன் பேசியிருப்பது, ஜெயிலர் 2-ஆம் பாகத்துக்கான விதையாக இருக்கலாம் என்று, ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News