மனைவி தற்கொலை.. சில மணி நேரங்களிலேயே கணவனின் அதிர்ச்சி முடிவு..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர், தனது மனைவி அபிநயா, மகள் சிவிகா, மகன் சர்வேஷ் ஆகியோருடன், வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, தனது வீட்டு குளியல் அறையில், அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சோகத்துடன் மருத்துவமனைக்கு வந்த செல்வராஜ், அங்கிருந்த மின் மோட்டார் அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே, கணவனும், தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News