தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட நாட்களாக படம் எதுவும் இயக்காமலே இருந்து வந்தார். தற்போது, அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, அவரது 23-வது படத்தை இயக்கி வருகிறார்.
மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை, படக்குழுவினர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை குறித்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளார்.
அதாவது, “வடஇந்தியாவை சேர்ந்த மக்கள், தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான், இந்த திரைப்படத்தின் கதை. வடஇந்தியர்கள் தென் இந்தியர்களை மதராஸி என்ற பெயரில் அழைப்பார்கள். அதனால் தான், இந்த திரைப்படத்திற்கு, இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.