வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இந்த படத்திற்கு பிறகு, காளி, பேப்பர் ராக்கெட் ஆகிய படைப்புகளை இயக்கியுள்ள இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூலில் சறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம் குறித்து, புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதன்படி, தான் இயக்க உள்ள அடுத்த படத்திற்காக, மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் கிருத்திகா உதயநிதி இணைய உள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.