ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. பங்கேற்காத செங்கோட்டையன்..

அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமானவர் ஜெயலலிதா. இவரது 77-வது பிறந்த நாள் விழா, இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, அதிமுகவின் தற்போதைய பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் எம்.பிக்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர். ஆனால், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கக் கூடிய செங்கோட்டையன், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இதனால், அதிமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News