சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் ஓம்குமார். ஜவுளி வியாபாரியான இவர், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். வார விடுமுறை நாள் என்பதால், கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது.
இதன்காரணமாக, நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த ஓம்குமார், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு, அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, ஓம்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.