18 வயது நிரம்பாத சிறுமியை, திருமணம் செய்த இளைஞரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற இளைஞரும், பெற்றோர் சம்மதத்துடன், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சிறுமியின் வயது குறித்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை, தேடி வருகின்றனர்.