“அது தவறான உறவு..” – அதிரடி முடிவு எடுத்த நடிகை அஞ்சலி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான Fall என்ற வெப் சீரிஸிம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் தவறான ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அது தவறு என்று எனக்கு தெரிந்துவிட்டது.. இனிமேல், இந்த உறவில் இருந்தால், என்னுடைய கரியர் பாதிக்கப்படும் என்று கருதி, அந்த உறவை முறித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வந்தனர் என்று சமீபத்தில் தகவல் பரவி வந்தது. அஞ்சலி தற்போது பேசியுள்ளது ஜெய்யை பற்றி தான் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News