இந்தியா
போதையில் இருந்த மாமனார்..! சைடு கேப்பில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்..! காதலுக்கு கண் இல்லையா..?
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியை சேர்ந்தவர் நாராயண் ஜோகி. 27 வயதான இவருக்கு, ரமேஷ் என்பவரது மகளுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து, நாராயண் ஜோகி, தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அன்று இரவு, நாராயண் ஜோகியும், ரமேஷூம் மது அருந்தியுள்ளனர். நன்றாக மது அருந்திய நிலையில், ரமேஷ் தனது சுய நினைவை இழந்துள்ளார்.
பின்னர், காலை விடிந்ததும், தனது மருமகனையும், மனைவியையும், காணவில்லை என்று ரமேஷ் தேடியுள்ளார். எங்கு தேடியும் இருவரும் கிடைக்காததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காதலுக்கு கண் இல்லை என்று கூறுவது வழக்கம். ஆனால், இப்படியான முறையற்ற உறவுகள் சமூக கலாச்சாரத்தை பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login