Trending
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் : தேதி அறிவிப்பு
காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login