வேறு சமூகத்தை சேர்ந்தவருடன் திருமணம்.. மகளை நீதிமன்ற வளாகத்திலேயே கொன்ற தந்தை..

பாகிஸ்தான் நாட்டில் உள்ள வஜிரிஸ்தான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டின் அருகில் வசித்து வந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் தந்தை இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்ப்பையும் மீறி, அந்த பெண் தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். மேலும், பாதுகாப்பு கேட்டு, கராச்சி நகர நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது, அங்கு வந்த அந்த பெண்ணின் தந்தை, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியின் மூலம் தனது மகளை சுட்டார்.

இதில், படுகாயம் அடைந்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த பெண்ணின் தந்தையையும், சகோதரரையும் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே நடந்துள்ள இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News