தமிழகம்
கன்னியாகுமரியில் திருட்டு.. சென்னையில் துணை நடிகைகளுடன் உல்லாசம்.. பலே திருடனை பிடித்த போலீசார்..
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைப் பழம். 48 வயதான இவர், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அதாவது, அம்பாசமுத்திரம் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், தொடர் திருட்டு சம்பவங்களில் சுடலைப் பழம் ஈடுபட்டுள்ளார். இவருக்கு இருசக்கர வாகனம் இயக்க தெரியாததால், பேருந்தில் மட்டுமே திருடுவதற்கு செல்வாராம்.
எந்த வீடு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளதோ, எந்த வீடு பகல் நேரங்களில் பூட்டப்பட்டுள்ளதோ, அதனை நோட்டமிட்டு, அங்கு சென்று பணம் மற்றும் நகையை திருடுவாராம். மேலும், திருடிய பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு, சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள துணை நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்த தகவல்களை அவரிடம் நடத்திய விசாரணையில் கண்டறிந்த காவல்துறையினர், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாரணை அனைத்தும் முடிந்த பிறகு, சுடலைப் பழம் பாளையங்ககோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login