Connect with us

Raj News Tamil

அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு..ரத்த கரையுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்தியா

அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு..ரத்த கரையுடன் மருத்துவமனையில் அனுமதி

ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அங்கு சுகாதாரத் துறை அமைச்சராக நபா தாஸ் இருந்து வருகிறார். மேலும் பிஜு ஜனதாதளத்தின் மூத்த தலைவராகவும் இருந்து வருகிறார்..

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். நபா தாஸுக்கு மார்பில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top