3 வயது சிறுமி.. கஞ்சா போதையில் தாயின் காதலன் செய்த பயங்கரம்.. உயிரும் போச்சே…

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள காமாக்ஷிபாலயா பகுதியை சேர்ந்த பெண், தனது 3 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கணவனை பிரிந்து வசித்து வரும் இவருக்கும், 26 வயது இளைஞர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

சிறுமியின் தாயார் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதால், அந்த 26 வயது இளைஞர் தான், சிறுமியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞர், வீட்டில் இருந்து 3 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞரை தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்துள்ளனர். 3 வயது சிறுமியை, 26 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News