அரசியல்
மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்குப் பிறகு மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
You must be logged in to post a comment Login