தமிழகம்
ஒரே நாளில் 3-வது முறை உடலுறவு.. கோபத்தில் காதலனை அடித்தே கொன்ற காதலி..
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். 41 வயதாகும் இவர், ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பிரியா என்ற நடுத்தர வயது பெண்ணுக்கும் இடையே, கள்ளக்காதல் இருந்துள்ளது. மாதத்தில் இரண்டு அல்லது 3 முறை, லாட்ஜில் அறை எடுத்து, உல்லாசமாக இருப்பதை, இருவரும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அந்த வகையில், கடந்த 8-ஆம் தேதி அன்று, இருவரும் அறையில் தங்கி, உல்லாசமாக இருந்துள்ளனர். இவ்வாறு இருக்க, திடீரென அறையில் இருந்து வெளியே ஓடி வந்த பிரியா, பிரகாஷ் மயக்கம் அடைந்ததாக, விடுதி மேலாளரிடம் கூறியுள்ளார். அவர் அறையின் உள்ளே வந்து, பிரகாஷை பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிரகாஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்டமாக பிரியாவிடம் நடத்திய விசாரணையில், “கள்ளக்காதல் விவகாரம் எங்கள் இருவரது வீட்டிற்கும் தெரிந்துவிட்டதால், தற்கொலை செய்ய முயற்சித்தோம். இதன்காரணமாக, இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு, தற்கொலை செய்ய முயற்சித்தோம். பிரகாஷ் உயிரிழந்துவிட்டார். ஆனால், என்னால் கயிற்றில் தொங்க முடியவில்லை” என்று கதறி அழுதுள்ளார்.
இதனை ஆரம்பத்தில் நம்பிய காவல்துறையினருக்கு, பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு, பிரியாவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரை அழைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, இருவரும் அடிக்கடி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கம்.
இதேபோல், 8-ஆம் தேதி இருவரும் 2 முறை உல்லாசமாக இருந்துள்ளனர். வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில், 3-வது முறையாக உல்லாசமாக இருக்கலாம் என்று பிரகாஷ் கேட்டுள்ளார்.
ஆனால், பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில், ஏற்பட்ட பிரச்சனையில், பிரகாஷை ப்ரியா கீழே தள்ளியுள்ளார். இதன்காரணமாக, தலையில் அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment Login