Connect with us

Raj News Tamil

தற்கொலை படையாக மாறவும் தயங்க மாட்டோம் – அதிமுக எம்.எல்.ஏ பேச்சு

அரசியல்

தற்கொலை படையாக மாறவும் தயங்க மாட்டோம் – அதிமுக எம்.எல்.ஏ பேச்சு

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் ஆளும் திமுக தலைமையிலான அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறாடா சு.ரவி தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய திமுக தலைமையிலான பொம்மை அரசு பதவி விலக வேண்டுமென தெரிவித்து அதிமுகவினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறாட சு.ரவி தமிழக முன்னாள் முதல்வர் மீது திமுக அரசு பொய் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் தமிழக மக்கள் திமுக அரசை விரைவில் அகற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு உடனடியாக முன்னாள் முதலமைச்சர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழக முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

திமுக அரசின் அராஜக போக்குக்கு எதிராக தற்கொலை படையாகவும் மாறுவதற்கு தயங்க போவதில்லை என எச்சரித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, மாவட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top