Connect with us

Raj News Tamil

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி ஆறுதல்!

தமிழகம்

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி ஆறுதல்!

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த 40 பேர், கடந்த 2-ந்தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும்போது, 6 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்திற்கு, தமிழக அரசு சார்பில், தலா 3 லட்சம் ரூபாய், நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் ஆகியோர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

அப்போது, அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலையை, கனிமொழி வழங்கினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top