Connect with us

Raj News Tamil

பள்ளியில் குளவி கொட்டியதால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழகம்

பள்ளியில் குளவி கொட்டியதால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் காந்திநகர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு வந்தபோது பள்ளியில் மரத்தில் தேன்கூடு கட்டியிருந்தது. தேன்கூடு கலைந்து அதிலிருந்து வந்த குளவி கொட்டியதால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 15 மாணவ மாணவியர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் ஐந்து பேர் ஓபி பிரிவில் பார்த்துவிட்டு வீடு திரும்பினார். மீதி 10 பேருக்கு மஞ்சள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top