Connect with us

Raj News Tamil

படுக்கையில் தூங்கிய கணவன்.. அரிவாளை எடுத்து வெட்டி வீசிய மனைவி.. கொடூர சம்பவம்..

தமிழகம்

படுக்கையில் தூங்கிய கணவன்.. அரிவாளை எடுத்து வெட்டி வீசிய மனைவி.. கொடூர சம்பவம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை. 51 வயதாகும் இவருக்கு, அன்னலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அமமுக கட்சியின் பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே, கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தம்பதியினர் இடையே, நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த சர்க்கரை, தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு, உறங்கச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அன்னலட்சுமி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த கணவனை சரிமாரியாக வெட்டி வீசியுள்ளார். அப்போது, உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர் மீது, பெரிய கருங்கல்லை எடுத்து, தலை மீது போட்டுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அன்னலட்சுமியை கைது செய்தனர். கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை, மனைவி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top