இந்தியா
மக்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய காங்கிரஸ் தலைவர் – பாஜக விமர்சனம்
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார்.
இதையடுத்து டி.கே. சிவக்குமார் பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசினார். உடனே அங்கிருந்த கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர்.
இதற்கு கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
You must be logged in to post a comment Login