மந்தீப் கவுர் என்ற பெண்ணுக்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில், திடீரென மந்தீப் கவுரின் முகத்தில் தாடி மீசை வளர ஆரம்பித்தது.
இதனால், வெளியே எங்கும் செல்ல முடியாமல் தவித்த மந்தீப் கவுரை, அவருடைய கணவரும் வெறுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், மந்தீப் கவுரை, அவருடைய கணவர் விவாகரத்து செய்துவிட்டார்.
தற்போது, அந்த பெண், தனது பெற்றோர் வீட்டில் தங்கி, விவசாயம் தொடர்பான பணிகளை செய்து வருகிறார். மேலும், ஆண்களைப் போல டர்பன் கட்டிக் கொண்டு வாழும் அவர், தனக்கு வளரும் மீசை மற்றும் தாடிகளை சேவிங் செய்யாமல் அப்படியே வாழ்ந்து வருகிறார்.
இவ்வாறு இருப்பதில் தனக்கு எந்தவொரு கவலையும் இல்லை என்று கூறும் மந்தீப் கவுர், தற்போது பொதுவெளியில் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் நடமாடி வருகிறார்.