Connect with us

Raj News Tamil

திரைப்பட பாணியில் டீ சர்ட்டை வைத்து பலரின் உயிரை காப்பாற்றிய 10 வயது சிறுவன் !

இந்தியா

திரைப்பட பாணியில் டீ சர்ட்டை வைத்து பலரின் உயிரை காப்பாற்றிய 10 வயது சிறுவன் !

மேற்கு வங்க மாநிலம், மால்டா அருகே கரியாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முர்சலீன்(10). இந்த சிறுவன் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார் . அப்போது ​​ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை பார்த்ததாக தெரிகிறது . கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்ட சிறுவன் முர்சலீன், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டி-ஷர்ட்டை உடனடியாக கழற்றி ரயிலுக்கு முன்பு காட்டியபடியே ஓடி வந்தான்.

சிறுவனை பார்த்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார். பின்னர் ரயில் ஓட்டுநர் இறங்கி கீழே வந்த போது, சிறுவன் முர்சலீன் அவரிடம் தண்டவாளத்தில் பெரிய பள்ளம் இருப்பதைக் கூறினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் முர்சலீனை வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து.

அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பள்ளத்தை மண் வைத்து நிரப்பினர். அதன்பின்னர் ஒன்றரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது. பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top