குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தை சேர்ந்த துஷ்யந்த் (12) என்ற சிறுவன் அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் இன்று அதிகாலை 5:30 மணியளவில் தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.