தமிழகம்
டிராக்டரை இயக்கிய 12 வயது சிறுவன்: ஒன்றரை வயது குழந்தை பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த திக்கானுர் ஆலமரத்து வட்டம் என்ற இடத்தில் ஸ்ரீ வர்ஷன் என்ற 12 வயது சிறுவன் டிராக்டரை எடுத்துக்கொண்டு தன்னுடைய தம்பி கிருஷாந்த் ஒன்றரை வயது சிறுவனை அருகில் அமர்ந்து கொண்டு டிராக்டர் இயக்கியதாக தெரிகிறது.
இதில் ட்ராக்டர் திடீரென கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை மீது விழுந்தது டிராக்டரில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியது.
உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் டிராக்டரில் சிக்கிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்ததால் குழந்தையின் உடலை பருகூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோருக்கு தெரியாமல் சிறுவன் ஸ்ரீ வர்ஷன் ட்ராக்டரை இயக்கி குழந்தை பலியான இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.