Connect with us

Raj News Tamil

15 வயது மாணவி மாரடைப்பால் பலி….தேர்வு எழுத வந்த போது நடந்த சோகம்

இந்தியா

15 வயது மாணவி மாரடைப்பால் பலி….தேர்வு எழுத வந்த போது நடந்த சோகம்

கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி தேர்வு அறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழப்புக்கு காரணம் அறிய, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More in இந்தியா

To Top