தமிழகம்
இடிந்து விழும் நிலையில் 17 மாடி கட்டிடம்…மரண பயத்தில் 490 குடும்பங்கள்!
சென்னை சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் நிலத்தில் ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்த 2015ம் ஆண்டு பணி நிறைவு சான்றிதழை சி.எம்.டி.ஏ. வழங்கியது. இங்கு கட்டப்பட்ட 630 வீடுகளில் 490 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில், இந்த வளாகத்தில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தினமும் எந்த நேரத்தில் என்னவாகுமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.
கட்டிடத்தின் நிலைமை மோசமடைந்ததால் அது குறித்து மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.