Connect with us

Raj News Tamil

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை…!

தமிழகம்

கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை…!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி – சத்யா தம்பதிக்கு ரித்திகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையின் தாய் ரித்திகாவை குளிப்பாட்டுவதற்காக அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். பிறகு கொதிக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் கழிவறையில் உள்ள பாத்திரத்தில் ஊற்றியுள்ளார். வீட்டின் கதவை மூடுவதற்காக குழந்தையின் தாய் வெளியே சென்ற போது அந்த குழந்தை கொதிக்கும் தண்ணீரில் விழுந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். பிறகு குழந்தையை மீட்டு அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தை ரித்திகா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வயது பெண் குழந்தை கொதிக்கும் தண்ணீரில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top