தமிழகம்
நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து..!
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக காரை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login