தமிழகம்
நேருக்கு நோ் மோதிக்கொண்ட காா் -அரசு பேருந்து ! காயமடைந்த 27 போ் !
திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த அரசு பேருந்தும், நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற சொகுசு காரும் நீடாமங்கலம் அருகே வையககளத்தூர் பாலம் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கார் சிறிய அளவில் சேதமடைந்தது அரசு பேருந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், பேருந்தில் பயணித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த கவிதா (44), அங்கம்மாள் (81), முகந்தனூர் மோனிகா (21), ஆணை குப்பம் பாக்கியலட்சுமி (30), கீச்சாங்குப்பம் ராமச்சந்திரன் (20), மாத்தூர் சரவணன் (40), நாகப்பட்டினம் நாகவல்லி (44) ஆகியோர் உட்பட 27 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இவர்களில் கவிதா, அங்கம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்த உடன் நீடாமங்கலம் போலீசாரும், வட்டாட்சியரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது