Connect with us

Raj News Tamil

தபால் ஓட்டளித்து வீடியோ வெளியிட்ட போலீசார் மீது வழக்கு!

தேர்தல் 2024

தபால் ஓட்டளித்து வீடியோ வெளியிட்ட போலீசார் மீது வழக்கு!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே வேம்பனியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணிபுரிகிறார். இவர் பத்து நாள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

சிவகங்கை தொகுதி வேட்பாளர்களுக்கான தபால் ஓட்டு போடும் பணி நடைபெற்றது. காளையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தபால் ஓட்டு போட வந்த சதீஷ்குமார், தான் ஓட்டளித்த சீட்டினை வேட்பாளர் படங்களுடன், யாருக்கு ஓட்டளித்தேன் என்பதை தெரிவிக்கும் விதத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின்படி, காளையார் கோவில் போலீசார், சி.ஆர். பி.எப்., போலீஸ் சதீஷ்குமார் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்று தபால் ஓட்டளிக்கும் விவரத்தை வெளியிடுவது சட்டப்படி தவறாகும். அப்படி வெளியிட்டு ஒரு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More in தேர்தல் 2024

To Top