Connect with us

Raj News Tamil

போலீசே இப்படி செய்யலாமா??…பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடும் காவலர்..!!

தமிழகம்

போலீசே இப்படி செய்யலாமா??…பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடும் காவலர்..!!

சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் நிறுத்தி சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை உதவி ஆய்வாளர் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலுக்கு சத்தியநாராயணன் என்பவர் உணவு அருந்த சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஹெல்மெட்டை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காக்கி உடையில் வந்த காவலர் ஒருவர் ஹெல்மெட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தியதில் ஹெல்மெட் திருடிய நபர் எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சென்னை காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

போலீசே ஹெல்மெட் திருடிய சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top