மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்பனை செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ போடுவதற்காக ஐபோன் வாங்க அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.
இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை போலீசார் தேடி வருகின்றனர்.