Connect with us

குடிநீர் தொட்டியில் சடலமாக மிதந்த நாய்க்குட்டி – கிராம மக்கள் அதிர்ச்சி

தமிழகம்

குடிநீர் தொட்டியில் சடலமாக மிதந்த நாய்க்குட்டி – கிராம மக்கள் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் ஐந்து கிராமங்கள் பயன்படும் வகையில், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி உள்ளது.

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், அங்கு சுற்றித் திரிந்த நாய் குட்டியை அடித்து நீர்த் தேக்கத் தொட்டியில் போட்டுள்ளனர். இதை அறியாமல் அந்த தொட்டியில் தேக்கி வைத்திருந்த தண்ணீரையே மக்களுக்கும், மாணவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். தொட்டியில் நாய் கிடந்த தண்ணீரை சுத்தம் செய்யாமலேயே விநியோகம் செய்த நிலையில், தண்ணீர் நாற்றம் அடித்துள்ளது.

இதையடுத்து தண்ணீர் தொட்டியில் பார்த்த போது, மூடி திறக்கப்பட்டு, தண்ணீரில் நாய்க்குட்டி ஒன்று சடலமாக மிதந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து பிறகு தண்ணீரை ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தண்ணீர் தொட்டியில் நாய்க் குட்டியை அடித்து போட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top