Connect with us

Raj News Tamil

மக்களே உஷார்… வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைக்கும் திருட்டு கும்பல்

தமிழகம்

மக்களே உஷார்… வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைக்கும் திருட்டு கும்பல்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைத்து திருட்டு நடைபெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, வியாசர்பாடி, மேடவாக்கம், முடிச்சூர் பகுதிகளில் இருக்கும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

ஆயிரக்கணக்கான வீடுகளும், வாகனங்களும் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. அப்படி கைவிடப்பட்ட வீடுகளையும், கார்களையும் திருட்டு கும்பல் குறிவைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து கிடைக்கும் பொருட்களை திருடிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தண்ணீர் சூழ்ந்த வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

More in தமிழகம்

To Top