Connect with us

Raj News Tamil

காதல் திருமணம் செய்த மகள்.. மண்ணை அள்ளி வீசிய தாய்.. காவல்நிலையத்தில் பரபரப்பு!

தமிழகம்

காதல் திருமணம் செய்த மகள்.. மண்ணை அள்ளி வீசிய தாய்.. காவல்நிலையத்தில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீபவானி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர், இருவரும் தனியாக வீடு எடுத்து, குடும்பம் நடத்தி வந்தனர்.

இதனை அறிந்த பெண் வீட்டார், புதுமனத் தம்பதியினரை பிடித்து, காவல்துறையில் ஒப்படைத்தனர். மேலும், மகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் கூறினார்.

ஆனால், காதலனுடன் வாழ அந்த பெண் விருப்பம் தெரிவித்ததால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விரக்தி அடைந்த பெண்ணின் தாய், அவர் மீது மண்ணை அள்ளி வீசிச் சென்றார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top