விளையாட்டு
கொல்கத்தா அணி அபார வெற்றி!
நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் போட்டி ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய டெல்லி அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
111 ரன்களில் 8 விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்தது டெல்லி கேபிட்டல்ஸை, குல்தீப் யாதவ் 35 (26) எடுத்து அணியின் ரன் உயர உதவினார்.
20 ஓவர்களில் டெல்லி அணி, 9 விக்கெட்டு இழந்து 153 ரன்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டு இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.