Connect with us

Raj News Tamil

செல்பி எடுக்க வந்த நபரை கடித்து குதறிய சிங்கம்..!!

இந்தியா

செல்பி எடுக்க வந்த நபரை கடித்து குதறிய சிங்கம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருபவர்கள் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கும் சென்று வருகின்றனர். இந்த வன உயிரியல் பூங்காவில் ஏராளமான வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்ற 34 வயது இளைஞர் நேற்று உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். இவர் சிங்களுக்கு அருகில் நின்று அவர் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கூண்டில் இருந்த சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது.

இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செல்பி எடுக்க சென்ற இளைஞர் சிங்கம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top