இந்தியா
பழுதாகி நின்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து – 11 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு இன்று அதிகாலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது 4.30 மணியளவில் ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தின் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் 11 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.