Connect with us

Raj News Tamil

வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற போதை ஆசாமி கைது..!

தமிழகம்

வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற போதை ஆசாமி கைது..!

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் பிரபு. இன்று அதிகாலை இவருடைய வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து பிரபுவின் குழந்தையை கடத்த முயற்சித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர்.

அந்த நபர் வீட்டின் வாசலில் தடுமாறி விழுந்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போது அந்த நபர் போதையில் இருந்தது தெரியவந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், அவர், ராயப்பேட்டை பகுதியில் சாலை ஓரத்தில் வசிக்கும் புருஷோத்தமன் என்பதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது.

புருஷோத்தமன் போதையில் இருப்பதால், போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால் தான் முழுமையான தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top