Connect with us

Raj News Tamil

ஆபாச விளம்பரத்தால் தேர்வில் தோல்வி அடைந்ததாக கூகுள் மீது வழக்கு போட்ட நபர்..!

today tamil news

இந்தியா

ஆபாச விளம்பரத்தால் தேர்வில் தோல்வி அடைந்ததாக கூகுள் மீது வழக்கு போட்ட நபர்..!

மத்திய பிரதேசம் பன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் கிஷோர் சவுத்ரி. இவர் மாநில காவல்துறை தேர்வுக்காக யூடியூபில் படித்து வருகிறார். படிக்கும் போது விடியோவின் இடையில் வரும் ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறியதாகவும் அதனால் படிக்க முடியாமல் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 75 லட்சம் தர வேண்டும் என கூகுள் நிறுவனத்தின் மீது மனித உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார்.

today tamil news

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் விளம்பரம் பிடிக்கவில்லை என்றால், அதைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். தேர்வுக்கு சரியாக படித்திருக்கலாம். தேர்வை நன்றாக எழுதியிருக்கலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் வழக்கு போட்டவர் மீதே நீதிமன்றம் 1 லட்சம் அபராதம் விதித்தது. அவ்வளவு பெரிய அபராதத் தொகையை கட்ட இயலாது. அபராதத் தொகையைக் குறைத்துத் தருமாறு மனுதாரர் கேட்டுள்ளார். அதன் பிறகு அபாரத்தத் தொகையை ரூ.25,000 ஆக விதித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்தியா

To Top